எம் வி சன்


உனக்கு என் நன்றிகள் ...

Photobucket

காதல் ஒரு பெரு விருட்சம் அதில் உன் அன்பு
ஒடியாத கிளை அதில்
காலம் தோறும் இளைப்பாறலாம்
என்று ஓடோடி வந்தேன் ....
வந்த பின்தான் தெரிந்து கொண்டேன்
அது நிஜம் அல்ல கனவு என்று...
ம்ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்ம்.. ¨
காதலிக்கும் போது தெரிவதில்லை
கனவுகள் கலைந்து விடும் என்று...
ஆனாலும் உனக்கு என் நன்றிகள்
இதுவரை உன் பாசம் என்னும் தோப்பில்
உட்கார இடம் தந்து காவல்காரனாய் இருந்தற்க்கு..

இன்று உன் கடமை முடிந்து விட்டது என்று என்னை
விரட்ட நினைக்கிறாய் போலும் ...
இவ்வளவு நாளும் உட்கார்ந்து இருந்தவளை எப்படி
உடனே வெளியேற சொல்வது என்று
நினைத்தா வார்த்தை என்னும் கோடாரியால்
என் மனதை தினம் தினம் துண்டாக்கிறாய் ....

என்னவனே... உன்னை விட்டு போக சொல் போகிறேன்
ஆனால் உன் அனுமதியின்றி உன் நினைவுகளை மட்டும்
உன்னிடம் இருந்து பறித்துசெல்கிறேன்..
Photobucket

முடியவில்லை

Svr.pamini
தினந்தோறும் கண்களில் கனவு சுமந்து
இதயத்தில் உன்னை வைத்து கொண்டு
வாழ்க்கை என்னும் நரகத்தில்
தினம் தினம் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

அன்பே உன்னை மறக்க வேண்டும்
என்றுதான் தினமும்நினைக்கின்றேன்
ஆனால் உன் பார்வைகள் என் மேல்
விழூந்த அந்த நாளை ..
உனக்காய் நான் கவிதை எழுதிய
அந்தநாட்களையும் உனக்காக
ஒவ்வோர் நிமிடமும் இதயம் அனலாய்
கொதிக்க காத்திருந்த அந்த
இனிய நாட்களையும் சேர்த்து
மறக்கத்தான் ஆனால் என்னால்
மறக்க முடியவில்லையே
 ..
Svr.pamini

உனக்காக..

Svr.pamini


என் இதயத்தை உனக்கு தந்துவிட்டேன்..
வாழ்க்கையை உனக்கே
அர்ப்பணித்துவிட்டேன் ..
என் வாழ்க்கை துணைவா ..
என்றென்றும் உன் நினைவுகளையும்
உயிரில் உன் அன்பையும் சுமந்த படி
உன் மனைவியாய் உனக்காக வாழ்வேன்

காதல் வலி தந்தவனே..

Svr.pamini

மனதினில் என் மனதினில் உந்தன் முகம் வந்து
ஏனோ ஏனோ என்னை கொல்கிறது..

காதலும் நீயேன வாழ்வும் நீயென
வாழ்க்கையை தொலைத்தேன் வாலிப வயதினிலே...
உறவுகள் இருந்தும் என் உயிர் நீயேன
உயில் எழுதி தரவா உயிர் ஓவியமே..

உறங்கா உன் நினைவுகள் உறக்கத்திலும் உளரலாய்
காற்றினில் கலக்குதடா காதல் வலி தந்தவனே..

என் கண்ணை பாரடா
என் இதயத்தின் வலிகள் இரு விழிகளிலும் தெரியுமடா
இதயத்தில் பூவாய் மலர்ந்தவனே..

ஏனடா என் இதயத்தை புயலடித்த தேசமாய் மாற்றினாய்..
காதல் என்னைவிட்டு பிரியவில்லை நீமட்டும் ஏனடா
என் காதலை விட்டு பிரிந்து செல்ல நினைக்கிறாய்..
என் காதலும் எங்கே என் கவிதையும் எங்கே
சொல்லிவிட்டு போ இல்லை
என்னை கொன்று விட்டு போ..

Svr.pamini

எண்ண அலைகள் ....!


நீ வந்த வேளை என் வாழ்வில்
சந்தோசங்கள் கூத்தாடின
நீ போன வேளை பிரிவின் வேதனைகள்
இதயத்தில் கனக்கின்றது..!
உன்னை வழியனுப்பி விட்டு நடக்கின்றேன்
கால்கள் நடக்க மறுக்கின்றது..!
கண்களால் நாற் திசையும் பார்க்கிறேன்
எல்லாமே வெறுமையாக இருப்பதை
போல் உணர்கின்றேன்..!

நீ என் அருகில் இருக்கும் போது அழகாக
தோன்றிய பொருடகள் எல்லாம்
நீ இல்லாத வேளையில் அழகற்றதாய்
தோன்றுகின்றது ..!

அடி மனதில் இருந்து பிரிவின் வேதனை
கண்ணீராக கண்களின் வழியே வழிகின்றது ..!
ஆனாலும் உந்தன் நினைவுகள்
மயிலறகாக வருடுவதால்
சற்றேனும் என் இதயத்துக்கு
ஆறுதலாக இருக்கின்றது..!

நீ என்னை விட்டுத்தான் பிரிந்து சென்றாய்
உள்ளத்தால் அல்ல ஆனாலும்
இந்த பிரிவு கூட சுகம்தானடா ..!
உன்னை பற்றிய எண்ண அலைகள்
இன்னும் கூடுதலாக பெருக்ககெடுப்பதால்..!
Svr.pamini

எனக்குள் வந்தவனே...

Svr.pamini
என் கனவில் தினம்தோறும்
மிதப்பவன் நீ..!
என் நெஞ்சில் வியாபித்து
இருப்பவன் நீ..!
என் உணர்வுகளை எல்லாம் ஆட்டிப்
படைப்பவன் நீ ..!
இப்படி நான் நானாக இல்லாமல்
நீயாக இருக்கும்போது
நீ மட்டும் எப்படி நீயாக இருக்கிறாய்..!

ஒருமுறையாவது நீ நீயாக இல்லமால்
நானாக இருந்து பார் அப்போதுதான்
என் காதலின் ரணம் உனக்கு புரியும் ..

அதற்காக நீ காலம் தாமதித்து
என்னை புரிந்து கொண்டால் நான்
கட்டம் போட்ட கல்லறையில் அல்லவா
துயின்று கொண்டு இருப்பேன் ..
அதற்காக இன்றே உன் காதலை
வந்து சொல்லி விடு எனக்குள் வந்தவனே..
Svr.pamini

பெண்ணே..

Svr.pamini

பெண்ணே நின்று நிதானித்தால்
நீ ஒரு நூலகம் ...
தென்றலின் வேலை நிறுத்தத்தில்
உன் கூந்தல் தெளிந்த நல் அருவி
அந்தி மலர் மேடைதனில்
ஆடி வரும் மேகம் என நீ வந்தாய்
ஆனால் என் மனமோ கலைந்து விட்டது.

நெஞ்சில் கனவில் நினைவில் மேடையிட்டு
என் இதயத்தில் இடம் பிடித்தவளே
மொட்டாக உன் இதழ் இமைகள்
மூடிக்கொண்டு இருக்கும்
உன் மணிச்சர விழிகள்
என் மேல் மலர்ந்தால் போதும்
வேறன்ன வேண்டும் எனக்கு இவ் வையகத்தே

நீ வருவாய் என..

Svr.pamini


உன்னை மறக்க மறுக்கின்றது
என் இதயம் ..
உறங்க மறுக்கின்றது
என் விழிகள்...
ஆனால் இப்போதெல்லாம் என் இரவுகள்
கனவுகளில் அல்ல..
கண்ணிரில் கரைந்து போகின்றன

நான் நினைக்கும் போதெல்லாம்
நீ வந்து விடுவாய் என்று நினைத்து
கொண்டுதான் என் நாட்கள்
உருண்டோடிப்போகின்றன..
ஆனாலும் என் உதடுகள் தினம் தினம்
சொல்லிக் கொண்டே இருக்கின்றது..
என் இதயம் கலங்குவதைஉன் இதயம் தாங்காதென்று

காத்திருக்கிறேன்...

Svr.pamini
உன்னை சந்திக்கும் அந்த
என் மனதுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள்
அல்லவா இறக்கை முளைத்து
சிறகடித்து பறக்கின்றன ...
உன் பார்வைகள் நான் ஸ்பரிசிக்கவேண்டும்
உன் மூச்சு காற்றினை நான் சுவாசிக்க வேண்டும்
உனக்குள் என்னை தொலைத்து விட்ட
அந்த நாளை உன்னிடம்வார்த்தைகளால்
வடித்து கூறவேண்டும்..

நாதமாய் உன் குரல் ஓசை தினம்தோறும்
என் இதயத்துக்குள் மெட்டுக்கட்டி
இசைபாடிக் கொண்டு இருப்பதை வார்தைகளால்
உன்காதோரம் நான் கூறவேண்டும்..

உயிரே அன்று என் மனதுக்குள் காதலை
விதைத்து விட்டு சென்றுவிட்டாய்
அது இன்று மொட்டாக விரிந்து பூவாக மலர்ந்து
என் இதயத்துக்குள் பூகம்பத்தை அல்லவா
உண்டாக்கி விட்டது..

என் இதயமே நீ என்றுதான் வருவாயோ
உனக்காக தினந்தோறும் விழியில்
கண்ணீரோடு காத்திருக்கிறேன்
Svr.pamini

வாடிக்கை,,,

நான் உயிருடன் இருக்கின்றேன்
ஆனால் உன் வார்த்தைகளால்
என் உணர்வுகள் மரணித்து விட்டது
இப்போது உயிர் உள்ள நடைப்பிணம் நான்..

ஆசைகள் எல்லாம் கனவுகளில் மட்டும்
நிஜங்களாய் நடப்பதும் தூக்கம் கலைந்தவுடன்
அனைத்தும் விடை பெற்று
மீண்டும் தூக்கம் வரும் போது
தொடர் கதையாக நடப்பதும்
என் வாழ்க்கையில் வாடிக்கையாகி விட்டது
கேள்விகள் யாவும் கனாக்களில் கேட்க்க
கண்ணீர்தான் பதிலாகி போனது....

எதடா நான் செய்த பாவம்...?

Svr.pamini
நான் உன்னை காதலித்தது பாவமா..?
இல்லை உன் நினைவால் தினம் தினம்
நான் தவிப்பது பாவமா... ?
நீதான் வேண்டும் வேண்டும் என்று
உந்தன் பின்னால் அலைவதா...?
எதடா நான் செய்த பாவம்...?

காலம் மாறும் என் காதலும் ஜெயிக்கும் என்ற
நம்பிக்கையில் வாழ்க்கை பாதையில்
போராடி கொண்டு இருக்கிறேன்
என் போராட்டத்துக்கு முடிவேயில்லையா

காலங்களோடு போராடுகின்றேன்..
காத்திருப்போடு தவிக்கிறேன்..
காயப்பட்ட உள்ளம்
கண்களில் காணல் நீராய் தினம் தினம்
கண்ணீர்த் துளிகள் வடிகின்றது
 ..


உன் பாசம் எல்லாம் வேசமே..

Svr.pamini


என் நிழல் என தொடர்வாய் என நினைத்தேன்
என் பகையென மாறினாய்....
இருப்பாய் பாசமாய் என நினைதேன்
அது வேசம் என சொல்லாமல் சொல்லிவிட்டு போனாய் ....

நான் நீயாகவும் நீ நானகவும் இருப்பாய் என நினைதேன்...
ஆனால் என் உயிர் வாங்கி போக வந்தவன்
நீ என்று அப்போ நினைக்கவில்லையே ....

பேசத் தெரிந்தும் ஊமையாய் மனதுக்குள்
குமுறி குமுறி கதறுகிறேன்...
பேதை இவள் தவியாய் தவிக்கிறாள் ...
வரும் கால வாழ்வை எண்ணி துடியாய் துடிக்கிறாள்
யார்தான் புரிவாரோ இவள் மனசை....

என் இரு விழிகள்...!

கற்பனையில் வாழ்க்கை கலைந்துவிடும்
என்று தெரிந்தும்
கண்கள் கனவு தேடி பயணிக்கிறது.!

தொலைந்து போனது வாழ்க்கை
என தெரிந்தும்
தொலைதுர பயணமாய் வாழ்க்கை நகருது..!

இதில் என்றோ ஒரு நாள் போகும் உயிர்
இன்று போனால் என்ன என்று கேட்க்கும் மனது
இவை எல்லாம் முற்று பெறும் நாளை

இந்த பெண்ணின் மனம்.....??

முதல் முறை உன் குரல் கேட்ட..
அந்த நிமிடங்களில்! என்னை மறந்து
உன் குரலில் தொலைந்தே போனேன்..!

காற்றலை வழி வந்து என் காது வழி வீழ்ந்து
உன் குரல் தொடுத்த இனிமையான
அன்பான பண்பான வார்த்தைகள்
என்னில் புகுந்து இதயத்தை உனது வசமாக்கியது..!

உன் குரல் மட்டும் கேட்க்காமல் போய் இருந்தால்
என் வாழ்வின் அர்த்தம் புரியாமலே போய் இருக்கும்..!

பிரம்மன் படைப்பின் சிறப்பு படைப்பு நீயடா!
வர்ணிக்க வார்தைகள் தேடி அலையும் பேதை நானடா.!

உன் அன்பு சிறையில் சிறைப்பட்டு எனது மனம்!
விடுதலை பெற விருப்பமில் லாமல்..
உன்னுடன் இறுதிவரை ஆயுள் கைதியாக
வாழ அடம் பிடிக்கிறது...!

என் உறவென உனை மாற்றினாய்!
விழி வழியே உன் உருவம் நகல் எடுத்து
நித்தமும் பார்க்க வைத்தாய்.!

மொத்தத்தில்..என் இனியவனே உன்னிடம்
அடிமைப்பட்டு வாழ்ந்திட ஏங்குது..
இந்த பெண்ணின் மனம்.......!
 

Photobucket

என்னவனுக்காக...

Svr.pamini

வேசங்கள் நிறைந்த உலகில் பாசங்கள் எல்லாம்
வேசங்கள் என்று நினைத்தவள் மனதில்
நிஜங்களாய் நீ வந்தாய்..
காலந்தோறும் உன் அன்பை நான் சுவாசிக்க வேண்டும்
வாழ்வதானால் உன் அருகினில் வாழ வேண்டும்...
இல்லையேல் சாவதானால் உன் அருகினில் சாக வேண்டும்...

சோகம் என்னும் கடலுக்குள் மூழ்கிய என்னை
வாழ்க்கை என்னும் ஆனந்த கரையில் வாழ
வைக்க போராடுபவனே உன் அன்பினில்
என் தாயை காண்கிறேன்..

உன் கண்டிப்பில் என் ஆசானை பார்க்க்கிறேன்..
என் கஸ்டத்தில் தோள் கொடுக்கும் போது
ஒரு நல்ல நண்பனை காண்கிறேன்.
என்னோடு சண்டை பிடிக்கும் போது உன்னை
குழந்தையாய் காண்கிறேன்..
இப்படி காணும்யாவிலும் நிறைந்த நீ
காலம் முழுக்க உன் அன்பு எனக்கு மட்டும்தான்
என்று விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்கிட
என் மனம் நினைப்பது உண்டு...
கையொப்பம் எல்லாம் எதற்க்கு
உன் பாசம் என்னும் சொத்தை
எனக்கு உயில் எழுதி தந்த பிறகு
இதெல்லாம் எதற்க்கு..
ஆனாலும் நீ எனக்கு தந்த சொத்தை மற்றவர்
அனுபவிக்க விட நான் ஒன்றும் பொது நலவாதி அல்ல.

என் கனவுகளை சிதைத்து விட்டாய்..


காதல் சாலையில் நான் பயணிக்கும் போது
உன்னையும் என்னையும் நம் வாழ்க்கையையும் பற்றி
ஆயிரம் கனவுகள் வளர்த்தேன் கலைந்து விடாமல்..

ஆனால் நீயோ வார்த்தை என்னும் கூரிய ஆயுதத்தால்
என் கனவுகளை சிதைத்து விட்டாய்
உன்னால் எனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு
என்னிடம் மன்னிப்பு கேட்காதே ஏன் என்றால்
உன்னை என் மனதில் குழந்தையாய் சுமக்கிறேனடா
கோழி மிதித்து குஞ்சு ஒரு போதும் இறப்பதில்லையடா

ஆனாலும் நான் ஆசையாய் வளர்த்த
என் கனவுகளை வார்த்தைகளால் கொலை செய்தாய்
இன்று என் கனவுகள் நினைவுகளில்
குற்றுயிராய் மரணித்து கொண்டு இருக்கின்றது
என் கனவுகள் மீண்டும் உயிர் பெற வேண்டுமா??
உன் இதயமும் அன்பான வார்த்தைகளும்தான்
என் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் மருந்து

தயவு செய்து புரிந்து கொள் என் நினைவில் வாழும்
கனவுகளை கொன்று கொலைகாரன் ஆகிவிடாதே

Svr.pamini

என் தேவதையே......!


கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
கண்மணியின் அழகினை கண்டு கொண்டேன்
சொல்லிடவே வார்த்தையில்லை
சொல்ல தமிழ் எனக்கு தமிழ் எனக்கு பத்தவில்லை

உன் முகம் தெரியும் உன் முகவரி தெரியாது
நான் என்ன செய்வேன் கண்களிலே
வில் வளைத்து காதல் அம்பு நீ விடுத்தாய்

கத்தி மூக்கால் இதயமதை குத்தி குத்தி காயம் வைத்தயாய்
உன் பாதி மலர்ந்த செந்தாமரை போன்ற
உன் உதடுகள் முத்தமிட வா வா என்று அழைத்தன
உன் நாடி மட்டும் கோடி பெறும்........!

வாடி விட்ட வண்ண மலர் மலர்வடையச் செய்ய
உன் ஒரு சாடை சிரிப்பு போதுமென்பேன் .........!
வட்டமதி முகத்திலே வந்துசெல்லும் முகில்
என சில கூந்தல் குழந்தயென தவழ்ந்து விளையாடும்
பாடும் மீன்கள் விழியிலே..
பதியும் முத்து உன் பற்களிலே..
வானத்து நிலவோ வையகத்து மலரோ
என்ன வென்று சொல்வேன் உந்தன்
அழகை தேவதையே.

Photobucket

உன் குரல் போதும்..

Svr.pamini

pamini


உன் குரலை கேட்டாலே
உதிரத்தில் அலையடிக்கும்..

உன் குரல் போதும்..
உயிரின் அணுவும் அதிரும்

எந்த பாட்டு கேட்ட போதும்
உந்தன் நினைவே நெஞ்சில் மோதும்..

என்ன வேலை செய்த போதும்
உன் குரல் மட்டும் எனக்குள் கேட்கும்

என் காதும் உனக்கு கருவறைதான்..
உன் குரலைச் சுமக்கும் பலமுறை..

என் கண்ணீர் துளிகள் உன் விரல் தேடி வழிகின்றன...
என் கனவுப்பூக்கள் உன் குரல் கேட்டு விரிகின்றன...

உன்னோடு பேசத்தானே நெருங்கி வருகிறேன்..
என் மறுதலித்து என் நெஞ்சை நொறுங்க செய்கிறாய்
என் வாழ்வின் இனியவனே?

pamini

தவம் இருக்கின்றேன்..

Photobucket
உன் முதல் பார்வையில் என் உயிர் குடித்தவனே
நீ வருவாயே இல்லை என் மீதம் இருக்கும்
உயிரையும் திருடி செல்வாயோ..?

உன் சொல்லில்தான் என் உலகம் பிறக்குமடா
விடியல் என் வாசல் தேடி வருமடா...
என் ஜீவன் இங்கே ஊசல் ஆடுதடா
நீயில்லாத உலகில் நான் உயிர்த்திருக்க மாட்டேனடா
நீ இல்லாத உறவொன்றை கனவிலும்
நினைக்க மாட்டேனடா...

என்ன செய்கிறாய் என்னவனே
என் புலம்பல் உன் காதுக்கு எட்டவில்லையா..?
உன் நினைவினில் மூழ்கி தவிக்கிறேன்
என்னை மீட்டு எடுக்க உனக்கு தோன்றவில்லையா.. ?

என் ஆயுளின் அந்தி வரை அன்பினின்
வளர்பிறையாக நீ வருவாயா.. ?
உன் ஆம் என்ற ஓர் பதிலுக்காக
தினம் தினம் தவம் இருக்கின்றேன்..


Photobucket


காதலிக்க பயமா?
 
 காதலிக்க பயமா?காதல் என்றால்  வலி என்று பயமா? கவலை வேண்டாம் நீங்கள் மிகவும் இளகிய மனம் கொண்டவரா? நீங்கள் அளவுகடந்த பாசம் வைப்பவரா? அளவு  கடந்த பாசம் வைப்பவர்கள் ஒருவர்  மீது  காதல் கொண்டால் மனதிலேயே காதல்க் கோட்டை கட்டி விடுவார்கள். அவர்கள்...
 
(2011-01-11 23:15:10)
காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்
 
காத‌லி‌ப்பதை ‌விட, காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் செ‌ன்று நா‌ன் உ‌ங்களை காத‌லி‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூறுவதுதா‌ன் ‌மிகவு‌ம் கடின‌ம். அதை செ‌ய்து ‌வி‌ட்டா‌ல் காத‌லி‌ல் ‌‌நீ‌ங்க‌ள் பா‌தி‌க் ‌கிண‌ற்றை தா‌ண்டி ‌வி‌ட்டீ‌ர்க‌ள் எ‌ன்றுதா‌ன் அ‌ர்‌த்த‌ம். ச‌ரி...
 
(2010-11-25 17:12:29)
காதலரை ச‌ந்‌தி‌க்கு‌ம் போது
 
எ‌ப்போதாவது காதலரை ச‌ந்‌தி‌க்கு‌ம் நப‌ர்களு‌க்கு, ‌சில சமய‌ம் பத‌ற்றமாக இரு‌க்கு‌ம். எ‌ப்படி பேசுவது, எ‌ன்ன பேசுவது, எ‌ப்படி நட‌ந்து கொ‌ள்வது எ‌‌ன்ப‌தி‌ல் தய‌க்க‌ம் ஏ‌ற்படு‌ம். ஆனா‌ல், பத‌ற்றமோ, தய‌க்கமோ தேவை‌யி‌ல்லை. ‌நீ‌ங்‌க‌ள்...
 
(2010-11-25 17:11:16)
‌திருமண நா‌ள் ‌நினைவுக‌ள்
 
ஒரு ஆ‌ணி‌ன் ‌திருமண நா‌ள் ‌நினைவை இ‌ங்கு பா‌ர்‌க்கலா‌ம். ‌விடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திருமண நா‌ள். ந‌ள்‌ளிர‌வி‌ல் படு‌க்கையறை‌யி‌ல் கணவனை‌க் காணாம‌ல் ‌திகை‌க்‌கிறா‌ள் மனை‌வி. எழு‌ந்து ‌விள‌க்கை‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு...
 
(2010-11-25 17:10:18)
காத‌லி‌ல் உ‌ண்டா நகை‌ச்சுவை
 
காத‌லி‌ல் நகை‌ச்சுவை உ‌ண்டு. அது காதல‌ர்களாலேதா‌ன் உருவா‌கிறது. காத‌லி‌யி‌ன் அ‌ண்ண‌ன் அ‌ந்த‌‌ப் பொ‌ண்ண துர‌த்‌தி துர‌த்‌தி காத‌லி‌ச்‌சியே.. இ‌ப்போ எ‌ந்த அளவுல இரு‌க்கு உ‌ன் காத‌ல்.. அட ‌நீ வேறடா.. அவளோட அ‌ண்ணனு‌ங்க இ‌ப்போ எ‌ன்னை...
 
(2010-11-25 17:09:05)
காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்
 
ஒரு க‌ல்லூ‌ரி மாணவ‌ன் காதலு‌க்கு‌ம், ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ம் உ‌ள்ள ‌வி‌த்‌தியாச‌த்தை எ‌ளிய உரை‌யி‌ல் கூறு‌கிறா‌ன்.. * சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள். * நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம்...
 
(2010-11-25 17:08:34)

கொஞ்சி கொஞ்சி பேசும் வஞ்சிகொடியே உன்னில் தஞ்சம் கொள்ள உன் நெஞ்சில் ஓர் இடம் தருவாயோ

google